Published On: Sunday, October 19, 2014
நிமலராஜனின் நினைவேந்தலும் சச்சிதானந்தனின் நினைவஞ்சலியும்
மறைந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 14ஆவது நினைவேந்தலும் அமரர் ஐயா சச்சிதானந்தனின் நினைவஞ்சலிக் கூட்டமும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அமையத்தின் தலைவர் த.வினோஜித் தலைமை தாங்கியதுடன் நினைவேந்தல் சுடரேற்றல் வணக்க அஞ்சலி நினைவு உரைகள் என்பன நடைபெற்றன. இதன்போது ஊடகவியலாளர்கள் அரசியல் பிரமுகர்கள் ஊடகப்பணியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(பாறுக் சிகான்)
