Published On: Wednesday, October 22, 2014
எதிர்வரும் நாட்களில் இடியுடன் மழை பெய்யும்: வளிமண்டல திணைக்களம்
தற்போது இடமப்பெயர்ச்சி பருவகாலநிலை தீவிரமடைய ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன்கூடிய கடும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டல திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த காலநிலை மாற்றத்தினால் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றரிலும் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
