Published On: Sunday, October 19, 2014
மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் தகவல் பொய்யானது: ரவூப் ஹக்கீம் மறுப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக வெளியான செய்தியை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.
இதுகுறித்து மந்திராலோசனை செய்வதற்காக வெளிநாடு பறந்துள்ள கட்சியின் தலைவர்கள், யாருக்கு ஆதரவளிப்பது என்பதுகுறித்து இதுவரை எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளனர்.
கட்சி ஆதரவாளர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே சரியான முடிவை எடுக்க முடியுமெனவும், ஏனைய வதந்திகளை நம்பவேண்டாமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
