Published On: Friday, October 17, 2014
24 கோடி ரூபா செலவில் மன்னார் கச்சேரி கட்டிடத் தொகுதி
அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அயராத முயற்சியினால் வெற்றிடமாக இருந்த மன்னார் கச்சேரி கட்டிடத் தொகுதி 24 கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா அண்மையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒதுக்கப்பட்ட 24 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டி.எஸ்.செனவிரத்தின, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் விஜய தசநாயக்க, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் என பலரும் ஆகியோர் கலந்துகொண்டனர்.
