Published On: Tuesday, July 28, 2015
அப்துல் கலாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?

நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம்.
கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் பலமுறை அழுத்தம் கொடுத்தபோதும் கலாம் அதில் ஈடுபாடு காட்டவேயில்லை. உன் திருமணத்துக்கு வருகை தரும் சாக்கிலாவது நாங்கள் ராமேஸ்வரம் பார்க்கவேண்டும் என்று கலாமின் நண்பர்கள் அடிக்கடிச் சொல்வார்கள். ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது.
திருமணம் குறித்த கேள்விக்கு கலாமின் பதில் இப்படித்தான் இருக்கும்.நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவன். 4 அண்ணன்கள் உண்டு. எங்கள் குடும்பத்தில் 40 பேர் உள்ளார்கள். இந்த எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக்கையும் வேறு. ஒரு குடும்பத் தலைவனாக நான் குடும்பத்துக்கும் நேரமும் உழைப்பையும் கொடுத்தாகவேண்டும். அங்கே என் லட்சியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. லட்சியமா, குடும்பமா என்றால் குடும்பம் என் லட்சியத்துக்குப் பின்னால்தான். என்னுடைய இந்தக் கோட்பாட்டினால் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடக்கூடாது. ஆக, இறுதிவரை நான் இப்படி இருப்பதுதான் சிறந்தது. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள் என்று தன் மீது அக்கறை செலுத்தி கேள்வி கேட்பவர்களிடம் இந்தப் பதிலை அளித்துவிடுவார் கலாம்.