எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, July 28, 2015

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு: தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பு

Print Friendly and PDF

மேகாலயா மாநிலத்தில்  திங்கள்கிழமை மாலை காலமான முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட முடிவையொட்டி (27-ம் தேதி) முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி மாநில அரசின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும். இந்நாட்களில், மாநில அரசுக்கு சொந்தமான அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு சார்ந்த கேளிக்கை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2