Published On: Sunday, December 27, 2015
மட்டு மாவட்டத்தில் கடல் மீன்கள் தட்டுப்பாடு
தற்காலத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் கடல் கொந்தளிப்பாக கானப்படுவதால் மீனவர் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..
கடலில் ஒரு வகையான "மாறா" எனப்படும் காற்று வீசுவதால் கடலுக்குள் செல்வது ஆபத்தானது. அதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாது என மீனவர்கள் தெறிவிக்கின்றனர்.. இதன் காரணமாக மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடல் மீன்கள் தட்டுப்பாடு நிலவுவதோடு ஆற்று மற்றும் குளத்து மீன்கள் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மழை காலம் என்பதால் மரக்கறி வகைகளினது விலைகளும் உயர்நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது
(ஜுனைட்.எம்.பஹ்த்)

